New Smart Tamil Logo with Stroke

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Natural Resource in Tamil

இயற்கை என்றால் என்ன (What is nature in Tamil) என்று நாம் உணரும் அக்கணத்திலிருந்து நாம் நிச்சயமாக இயற்கையை நேசிக்க ஆரம்பிப்போம். தானாகவே தோன்றி இயல்பாகவே இருக்கின்ற அனைத்துமே இயற்கை (Nature in Tamil) என்று பொருள்படும்.

இயற்கை வளம் (Natural Resource in Tamil) என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாகும். இயற்கை (Iyarkai in Tamil) இன்றி இங்கு எதுவுமே இல்லை.

மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமாகிறான். இயற்கையில் உள்ள ஒரு சிறந்த படைப்பு மனிதன் ஆவான்.

இயற்கையானது பல வகையான வளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றின் துணையுடனே இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் உயிர் வாழ்கின்றன.

சரி வாருங்கள் இனி இயற்கை (Iyarkai) வளம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை வளம் என்றால் என்ன? (What is the natural resource in Tamil) – The Natural Resource in Tamil 

Natural Resource in Tamil
Natural Resource in Tamil

இயற்கை வளம் (Iyarkai valam in Tamil) என்பது மனிதனின் தலையீடுகள் எதுவுமின்றி இயல்பாக இருக்கும் வளமாகும். அதாவது இயற்கையாக தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், கனிமங்கள், தாவரங்கள் உயிரினங்கள் இவை அனைத்துமே இயற்கை வளங்களாகும்.

இவையின்றி மேலும் பல வகையான வளங்கள் இவ்வுலகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

இயற்கை வளங்கள் (Iyarkai valangal) மனித வாழ்க்கைக்கும் மற்ற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக துணை புரிகின்றன. உலகில் தயாரிக்கப்படும் அனைத்து உற்பத்திக்கும் மூலாதாரம் இயற்கை வளங்கள் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.

இயற்கை வளங்களின் வகைகள் (Types of natural resources in Tamil) – The Natural Resource in Tamil 

Natural Resource in Tamil
Natural Resource in Tamil

இயற்கை வளங்களை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதாவது புதுப்பிக்கத்தக்க வளங்கள், புதுப்பிக்க முடியாத வளங்கள் என இரண்டு வகைகளாக பிரிக்க முடியும்.

 புதுப்பிக்கத்தக்க வளங்கள் (Renewable resources)

புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படுபவை எப்போதும் கிடைக்கக்கூடியதாக இருப்பதும் அல்லது குறுகிய, குறிப்பிட்ட காலத்தில் ஈடு செய்யக்கூடிய அல்லது மீள நிரப்பக்கூடியதாக இருக்கும் வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்களாகும் (Renewable resources in Tamil).

சூரிய ஒளி, காற்று, நீர், மரம் போன்றவற்றை புதுப்பிக்கத்தக்க வளங்களாக கூற முடியும்.

புதுப்பிக்க முடியாத வளங்கள் (Non-renewable resources)

குறிப்பிட்ட காலத்தில் ஈடு செய்ய முடியாததும், பயன்படுத்தப்பட்ட பின் மீள நிரப்பமுடியாததுமான இயற்கை வளங்கள் புதுப்பிக்க முடியாத வளங்கள் (Non-renewable resources in Tamil)ஆகும்.

புதைவடிவ எரிபொருள்கள் (Fossil Fuels) என்று சொல்லக்கூடிய நிலக்கரி, பெற்றொல், இயற்கை வாயு போன்றவைகளும் கனிமங்களும் (Minerals in Tamil) புதுப்பிக்க முடியாத வளங்களுக்கு உதாரணங்களாகும்.

உலகத்தின் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக இயற்கை வளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இவ்வகையான வளங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால், எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான வளங்கள் போதியளவு கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது.

இயற்கை வளங்களின் முக்கியத்துவம் (Importance of natural resources in Tamil) – The Natural Resource in Tamil 

இயற்கை வளங்கள் (Iyarkai valangal in Tamil) மனிதன் உட்பட அனைத்து உயிர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்திசெய்கிறன. குறிப்பாக உணவு, உடை, உறையுள் போன்ற நமது அடிப்படை தேவைகளையும் இயற்கை வளங்கள் மூலமாகவே பூர்த்திசெய்துகொள்கிறோம்.

சொல்லப்போனால் நாம் சுவாசிக்கும் வளி கூட ஒரு இயற்கை வளமே. மேலும், இயற்கை வளங்கள் சூழலின் சமநிலையை பேணுவதற்கு உதவி புரிகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அந்நாட்டின் அபிவிருத்திக்கும் இயற்கை வளங்களே முக்கியமான காரணமாக அமைகின்றன.

அதுமட்டுமன்றி, ஒவ்வொரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் இயற்கை வளங்கள் வேவைப்படுகின்றன. அதாவது, உணவு உற்பத்தியில் ஆரம்பித்து எரிபொருள், சக்தி மற்றும் ஏனைய அனைத்து விதமான பொருட்களின் உற்பத்திக்கும் இயற்கை வளங்கள் மூலப்பொருள்களாக அமைகின்றன.

சுருக்கமாக சொன்னால் இயற்கை வளங்கள் இன்றி இவ்வுலகில் எதுவுமே இல்லை.

இயற்கை வளங்களின் சீரழிவு (Degradation of natural resources in Tamil) – The Natural Resource in Tamil 

Natural Resource in Tamil
Natural Resource in Tamil

இயற்கை வளங்களை நாம் பயன்படுத்தும் அதேவேளை அதிகரித்து வரும் சனத்தொகையின் விளைவாக வளங்கள் சீரழிவுக்கு உட்படுகின்றன.

ஏனென்றால், சனத்தொகை அதிகரிக்கும் போது அடிப்படையாக அவர்களுக்கான உணவின் தேவை அதிகரிக்கிறது. அத்துடன், இருப்பிடத்திற்கான இடவசதியும் அதிகரிக்கிறது.

இருப்பிட வசதிக்காக அதிகளவாக காடுகள் அழிக்கப்படுகின்றன. அத்துடன், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் வீடுகளும் மற்ற கட்டிடங்களும் சாலைகளும் உருவாக்கப்படுகின்றன.

இதனால் உயிர்கள் வாழ்வதற்கான உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதனால் நீர் வளம் குறைகிறது.

அத்துடன், விலங்குகளுக்கு உணவில்லாமலும் இருப்பிடம் இல்லாமலும் போகிறது. இதனால் வன விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

மரங்கள் வெட்டப்படுவதனால் முக்கியமாக மழை வீழ்ச்சி கிடைக்காமல் போகிறது. அதன் விளைவாக, நிலங்களுக்கு தேவையான போதிய நீர் கிடைக்காமையால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன.

இதையும் வாசியுங்கள்: 

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு பக்கம் நாடுகள் அபிவிருத்தியை நோக்கி போய்கொண்டிருக்கும் போது மறுபக்கம் இயற்கை வளங்கள் அழிக்கபடுகின்றன.

எவ்வாறென்றால், வாகனங்களிலிருந்து வரும் புகை நாம் சுவாசிக்கும் வளியுடன் கலக்கிறது. இதனால், காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, சுவாசம் சம்பந்தமான பல நோய்களும் வந்து சேர்கின்றன.

தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளால் நிலம் மாசடையும் அதேவேளை நீருடன் கலப்பதால் நீரும் மாசடைகிறது.

அதுவுமில்லாமல் வாகனங்கள், இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் வளிமண்டலம் மாசடைவதுடன், ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறு இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டு பாரிய அழிவுக்கு உலகமே போய்கொண்டிருக்கிறது.

இயற்கை வளங்களை பாதுகாப்போம் – The Natural Resource in Tamil 

நாம் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தையும் சீரழிவையும் பற்றி பார்த்தோம். ஆகவே இதிலிருந்து நாம் ஒரு விடயத்தை நன்கு உணர வேண்டும்.

என்னெவேன்றால், இயற்கை வளங்கள் எவ்வளவு முக்கியமானவை, அவற்றை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும், எந்த அளவுக்கு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால், நமது பயன்பாட்டுக்கு தேவையான வளங்கள் பற்றாக்குறையாவதுமட்டுமன்றி எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆகவே, இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இதையும் வாசிப்போம்: 

இயற்கையை நேசிப்போம்; இயற்கை வளங்கை பாதுகாப்போம்; சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top