New Smart Tamil Logo with Stroke

நீர் | Water in Tamil

Water in Tamil

இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமான முதல் காரணி நீர் ஆகும். உணவின்றி கூட சில காலம் வாழ முடியும். என்னும், நீரின்றி எந்த உயிராலும் அதிக நாள் வாழ முடியாது. நீரின் முக்கியத்துவத்தை இதை விட வேறு எந்த முறையாலும் விளக்கமாக கூற முடியாது.

நீர் வளம் (Water resource in Tamil) என்பது இறைவனால் இவ்வுலகுக்கு கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத ஒரு பெரும் பொக்கிஷமாகும். நீரின் அவசியத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

வாருங்கள்! இனி, நீரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

நீர் என்றால் என்ன?

Water in Tamil
Water in Tamil

நீர் (Water in Tamil) என்பது இரண்டு ஐதரசன் அணுக்களும் ஒரு ஒட்சிசனும் பங்கீட்டுவலுப்பிணைப்பால் உருவான ஒரு அசேதன சேர்மானமாகும். தூய நீரிற்கு  நிறமில்லை; மனமில்லை; சுவையில்லை; அத்துடன், இது ஒளிபுகவிடக்கூடிய ஒரு இரசாயன பொருளாகும்.

பூமியின் மேற்பரப்பானது 71% நீராலும் 29% நிலத்தாலும் உருவாகியுள்ளது. மேலும், பூமியில் நீரின் முழு அளவில் 96.5% கடல்களாலும் சமூத்திரங்களாலும் சூழப்பட்டுள்ளது.

அத்துடன், 1.76% பனிப்பாறைகளாகவும் பனி மேற்பரப்புகளாகவும் 1.69% நிலத்தடி நீராகவும் ஏனைய சதவீதமானவை  ஏரிகளாகவும், ஆறுகளாகவும், வளிமண்டல நீராவியாகவும், சேற்று நில நீராகவும் உயிரியல் நீராகவும் உள்ளது.

குறிப்பாக, 97% ஆன நீரானது உப்பு நீராகவும் 3% ஆன நீரானது சுத்தமானதாகவும் உள்ளது. எனினும், இந்த 3% நீரில் 0.5% வை மட்டுமே திரவமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுத்தமாக திரவ நிலையில் உள்ள நீரையே மனிதனும் நிலத்தில் வாழ்கின்ற பல உயிரினங்களும் பயன்படுத்துகின்றன. இருந்தபொழுதிலும், உப்பு நீரிலும் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பதும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

நீரின் நிலைகள்

நீரின் நிலையை 3 வகைகளாக பார்க்கலாம். அதாவது திண்மம், திரவம், வாயு ஆகிய 3 நிலைகளில் நீரை பெற முடியும். நீரின் நிலை மாறுவது வெப்பநிலையில் தங்கியுள்ளது.

திண்மமாக இருக்கும் நீரை பனிக்கட்டி என்றும், திரவமாக இருப்பதை நீர் அல்லது தண்ணீர் என்றும், வாயுவாக இருப்பின் அதை நீராவி என்றும் அழைப்பர்.

நீரை உறையவைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. அதை உருக்கும் போது மீண்டும் நீராகிறது. அதேபோல, நீரை ஆவியாக்கும் போது நீராவியாக மாறுவதோடு, நீராவி ஒடுக்கப்படும் சமயத்தில் மீண்டும் நீராக மாறுகிறது.

பனிக்கட்டி பதங்கமாதலால் (Sublimation) நீராவியாக மாறுவதோடு, நீராவி படியும் நிலையில் மீண்டும் பனிக்கட்டி நிலைக்கு தோற்றம் பெறும்.

தற்போது நீரின் அடர்த்தி பற்றி பார்க்கலாம். நீரின் அடர்த்தி அதன் நிலைக்கு ஏற்ப மாறுபடும். அதனைப்போலவே, அதன் வெப்பநிலை மாறும் போது அடர்த்தியும் மாறுபடும்.

00 C இல் நீரின் அடர்த்தி 999.87kg/m3 ஆகும். அதேபோல 40 C இல் அதன் அடர்த்தி  1000kg/m3 அதிகரிக்கிறது.

மேலும், வெப்பநிலை அதிகரிக்கும் போது அதன் அடர்த்தி குறைகிறது. அதன்படி, 1000 C இல் நீரின் அடர்த்தி 958.38kg/m3 ஆக உள்ளது. பனிக்கட்டியின் அடர்த்தி 917kg/m3 ஆக இருக்கும்.  

அழுத்தம் அதிகரிக்கும் போது அடர்த்தியும் அதிகரிக்கும்; அதேபோல அழுத்தம் குறையும் பொழுது அடர்த்தியும் குறையும்.      

நாம் நீரின் தன் வெப்பக் கொள்ளளவு பற்றி பார்த்தோமானால் அதன் தன் வெப்பக் கொள்ளளவு 4184Jkg-1K-1 ஆகும்.

நீரின் சுழற்சி

பூமியின் மேற்பரப்பின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் நிகழும் நீரின் தொடர்ச்சியான இயக்கம் நீரின் சுழற்சி ஆகும்.

இதன்போது நீரின் 3 நிலைகளும் மாறி மாறி நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அச்சமயத்தில் பல செயற்பாடுகள் நிகழ்ந்து நீரின் சுழற்சியானது மீண்டும் மீண்டும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

நீரின் சுழற்சி ஏற்படுவதனாலேயே உலகிலுள்ள அனைத்து உயிர்களும் தனது அன்றாட தேவைகளை பூர்த்து செய்துகொண்டிருக்கின்றன. ஏனென்றால், அனைத்து தேவைகளுக்கும் நீர் மிக மிக அவசியம் என்பதாலாகும்.

உலகத்தின் சமநிலைக்கு நீரின் சுழற்சி என்பது மிக முக்கியமான காரணியாகும்.

நீர் கிடைக்கும் வழிகள்

நீர் (Water in Tamil) கிடைக்கும் முதன்மை மூலங்களாக நாம் கடல்கள் மற்றும் சமுத்திரங்களை கூறலாம். ஆனால், இவை உப்பு நீராகத் தான் உள்ளது.

எனினும், கிடைக்கும் தூயநீரில் மூன்றில் இரண்டு பங்கு பனிக்கட்டிகளாகவும் பனி மேற்பரப்புகளாகவும் இருக்கின்றன.

அவை இன்றி நீர் கிடைக்கும் இடங்களாக நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோட்டங்கள், கால்வாய்கள், கிணறுகள், நீர் ஊற்றுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.  

மனித உடலுக்கு நீரின் அவசியம்

Water in Tamil
Water in Tamil

நீரின்றி எந்த உயிராலும் இவ்வுலகில் வாழ முடியாது என மேலேயே பார்த்தோம். ஆம்! உண்மை தான். குறிப்பாக மனிதனால் 24 மணித்தியாலங்கள் கூட நீரை அருந்தாமல் இருக்கவே முடியாது.

குறிப்பாக சொன்னால், மனித உடலின் இயக்கத்திற்கு நீரே மூல ஆதாரமாகும். ஒரு வளர்ந்தவரின் உடல் சராசரியாக 60% நீரை கொண்டிருக்கும். அதேபோல், குழந்தையின் உடலில் சராசரியாக 70% நீர் இருக்கும்.

இந்த அளவுகள் வயது, பால், நிறை மற்றும் நீர் அருந்தும் அளவை பொருத்து வேறுபடலாம்.

இனி, உடல் உறுப்புகளில் உள்ள நீரின் அளவைப் பற்றி பார்ப்போம்.

உடல் உறுப்புகள் நீரின் சதவீதம்
மூளை 73%
இதயம் 73%
தசை 79%
தோல் 64%
சிறுநீரகங்கள் 79%
எலும்புகள் 31%
நுரையீரல் 83%

இந்த அட்டவணையை பார்க்கும் போது நமது உடலுக்கு தேவையான நீரின் அவசியத்தை பற்றி நம்மால் நன்றாக உணர முடிகிறது.

ஒரு நாளைக்கு ஒரு வளர்ந்த ஆண் 3 லீட்டர் வரை நீர் (Water in Tamil) அருந்த வேண்டும். அதேபோல், ஒரு வளர்ந்த பெண் 2,2 லீட்டர் நீர் அருந்த வேண்டும். இந்த அளவானது வெறும் நீராக மட்டுமன்றி நாம் உண்ணும்  உணவுடன் நீர் சேர்ந்து கூட இருக்கலாம்.

உடல் இயக்கத்திற்கு நீரினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்

  • உடல் வெப்பநிலையை சீராக வைத்திருத்தல்
  • கலங்களின் உற்பத்திக்கும் அதன் செயற்பாட்டுக்கும் உதவுதல்
  • உணவு சமிபாட்டில் தொழிற்படல்
  • உடலில் ஊட்டச்சத்துகளை கொண்டு சேர்த்தல்
  • உடலின் கழிவுகளை சிறுநீராகவும் வியர்வையாகவும் வெளியேற்றல்
  • உணர்திறன் திசுவை பாதுகாத்தல்
  • உமிழ் நீர் சுரக்க முதன்மையாக தொழிற்படல்
  • மூட்டுக்களில் கொழுப்பிட துணை புரிதல்

இவ்வாறு உடலில் நிகழும் அனைத்து முக்கிய பணிகளையும் நீரே மேற்கொள்கிறது.

நீங்கள் தினமும் நன்றாக நீர் அருந்துவதை முக்கிய பழக்கமாக கொள்ளுங்கள். அது உங்களுடைய உடலின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

நீரின் பயன்பாடுகள்

நமது உடலுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல அன்றாட வேலைகளுக்கும் நீரின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும்.

அதாவது உணவு தயாரித்தல், குளித்தல், ஆடைகளை கழுவுதல், பொருட்களை கழுவுதல், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளல் உள்ளிட்ட நமது பல செயற்பாடுகளுக்கு நீர் பெறும் பங்களிப்பைச் செய்கிறது.

அதுமட்டுமன்றி, தாவரங்களின் உணவு உற்பத்திக்கும் கூட நீர் (Water in Tamil) மிக முக்கியமான காரணியாக தொழிற்படுகிறது.

இதையும் வாசியுங்கள்

ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னால் அது விவசாயத்தையே குறிக்கும். செழிப்பான விவசாயத்திற்கு அத்தியாவசிய காரணியாக நீர் விளங்குகிறது. நீர் இல்லையென்றால், நாடே பட்டினியால் அவதிப்படவேண்டியிருக்கும்.

நீரானது பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பயன்படுகிறது. ஆம்! பயணிகளை ஏற்றிச்செல்லவும் பொருட்களை கொண்டு செல்லவும் உலகம் முழுவதும் நீர் வழிப் போக்குவரத்துக்கு நீரானது பெரிதும் உதவுகிறது.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நீர் (Water in Tamil) மிக முக்கிய வளமாக இருக்கிறது.

உலகத்தில் தொழில்துறை செயற்பாடுகளுக்கு நீர் மிக அதிகமாக பயன்படுகிறது.

குறிப்பாக மின் உற்பத்தி, சுரங்க தொழில், கடதாசி உற்பத்தி, துணி உற்பத்தி, சாயமிடுதல், அச்சிடுதல் போன்ற பல தொழில்துறை பணிகளுக்கு நீர் பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டுமன்றி, மேலும் பல வகையான விடயங்களுக்கு நீர் (Water in Tamil) உபயோகப்படுத்தப்படுகிறது.

நீரை சேமிக்கும் முறைகள்

நீரின் அவசியத்தை பற்றி இப்போது நாம் நன்கு அறிவோம். ஆகவே, நீரை சேகரிப்பதன் முக்கியத்தையும் நம்மால் உணர முடிகிறது.

இருந்தபொழிதிலும், நீரின் பயன்பாடு ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கும் அதேவேளை, மறுபக்கம் நீர் மாசுபடும் அளவும் அதிகரித்துள்ளது.

ஆகவே, நீரின் முக்கியத்துவத்தை அறிந்து அதை மாசுபடுத்தாமலும் வீண்விரயம் செய்யாமலும் சேமிப்பது நமது எதிர்காலத்திற்குச் சிறந்தது.

பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை நீரை சேமிக்கும் பழமையான முறை என்றால், அது குளங்கள் அல்லது அணைக்கட்டுகளை அமைத்து நீரை சேமிக்கும் முறை தான்.

இதன் மூலம் பெருமளவில் நீரை சேமிக்க முடியும். எனினும், இரண்டு மலைகளுக்கிடையிலான பள்ளத்தாக்கை தடுத்து அணைக்கட்டு அமைத்து நீரை சேமிக்கும் போது பாரிய அளவிலான நீர் தேக்கிவைக்கப்படுகிறது.

நிலத்தின் மேற்பரப்பில் நீர் பல நிலைகளில் இருந்தாலும் கூட, நிலத்துக்கு அடியில் சுத்தமான நீரை இயற்கையாக சேமித்து வைப்பதில் நிலம் பெரும் பங்கு வைக்கிறது. 

அதேவேளை, நிலத்துக்கு கீழ் நீர்தேக்கத் தொட்டி அமைத்து, தற்போது நவீன முறைப்படி நீர் (Water in Tamil) சேமிக்கபடுவதும் குறிப்பிடத்தக்கது. 

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் நீரை தேவையில்லாமல் வீண்விரயம் செய்யாமல் இருப்பதும் ஒரு வகையில் சேமிப்பாகும்.

இதையும் வாசியுங்கள்:

உலக நாடுகளில் நீரின்றி பல கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் பஞ்சத்தினாலும் தவிக்கிறார்கள். நீரின்றி இந்த உலகில் எதுவுமே செய்ய முடியாது.

நீர் என்பது பெறுமதி வழங்க முடியாத ஒரு இயற்கை வளம் ஆகும். எனவே, இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த அருமையான பொக்கிஷத்தை பாதுகாப்போமாக.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top